இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடங்கிய நாள் மார்ச்.10, 1949

இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடங்கிய நாள் மார்ச்.10, 1949
இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும்.
இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லா கான் ‘அகில இந்திய முஸ்லிம் லீக்கை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் முகமது அலி ஜின்னா அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் காயிதே மில்லத் இதன் தலைவரானார்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போகாமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டதால் அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த ‘அகில’ என்பதை நீக்கிவிட்டு 1949-ம் வருடம் மார்ச் மாதம் இதே நாளில் ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்து.
காயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவராக இப்ராகிம் சுலைமான் சேட், பனாத்வாலா ஆகியோர் பணியாற்றினர். தற்போது மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் ஈ.அகமது அகில இந்திய தலைவராக உள்ளார்.
தமிழகத்தில் அப்துல்சமது, அப்துல் லத்தீப் ஆகியோர் சிறப்பாக பணியாற்றினர். தற்போது காதர் மைதீன் தமிழக தலைவராக உள்ளார்.