60 மனைவிகளையும் ஒரே இடத்தில் கொடூரமாக கொன்று குவித்த மன்னன்
1659ம் வருடம் தற்போதைய கர்நாடக மாநிலத்தை ஆண்ட மன்னர் அப்சல் கான். அக்காலத்தில் சிறந்த போர் வீரனாக திகழ்ந்த இவர். அப்போது யாரும் எதிர்க்க துணியாத மாமன்னரான சத்ரபதி சிவாஜியையே எதிர்த்து போர்புரிய தயார் ஆனார்.
அந்த காலத்தில் சத்ரபதி சிவாஜி பெயரை கேட்டாலே மக்கள் பயந்து நடுங்குவார்களாம். அவர் படையெடுத்து வந்தால் நிச்சயம் அவருக்குத்தான் வெற்றி என்று பேசிக்கொண்டுள்ளார்கள். இதனால் இஸ்லாமிய அரசர்களுள் சிலர் சத்ரபதி சிவாஜி மீது பொறாமை கொண்டிருந்தனர், ஆயினும் சிவாஜியை தங்களால் ஒருபோதும் கொல்ல முடியாது என்ற யதார்த்தத்தை புரிந்து கையறு நிலையில் இருந்தனர்.
ஆனால் அப்சல் கான் எனும் இஸ்லாமிய அரசரன் சிவாஜியை எதிர்க்கத் துணிந்தான். யார் யாரோ சொல்லியும் கேட்காத அப்சல்கான் சிவாஜியுடன் போருக்கு தயாரானான். அப்சல் கானுக்கு மொத்தம் 60 மனைவிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் மிகவும் அப்பாவிகள். எப்படியும் அப்சல் கான் இந்த போரில் தோற்று விடுவார், அதன் பின்அவர்களின் சாவு நெருங்குவதைக் கண்டும் அவர்கள் கண்கலங்கவில்லை.
இருப்பினும் ஜோதிடத்தால் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டார் அப்சல் கான். ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்த அப்சல்கான் அதை நம்பியே எல்லா வேலைகளையும் செய்து வந்தார்.
எனவே சிவாஜியுடன் போருக்கு செல்வதற்கு முன்னர் ஜோதிடரை அழைத்து இந்த போரில் யார் வெற்றிபெறுவார் என கேட்டான் அப்சல் கான். அப்போது என்ன நடந்தது தெரியுமா? இந்த முடிவைக் கேட்டது அப்சல் கானுக்கு உலகமே இருண்டது ஆம். சிவாஜியை எதிர்த்து போரிட்டால் அப்சல்கான் உயிரிழக்க நேரிடும் என ஜோதிடர் கூறியுள்ளார்.
போர் சூழல் நெருங்க நெருங்க என்ன நடக்கப் போகிறது என்று அப்சல் கானுக்கு ஒரே பதற்றம். அப்சல் கான் தான் ஒருவேளை இறந்துவிட்டால், தன் மனைவியர்களை வேறுயாரும் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான், இதனால் ஒரு கொடூர முடிவை எடுத்தான்.
தனது 60 மனைவிகளையும் ஓரிடத்துக்கு அழைத்த அப்சல் கான் அங்கு அவர்களை சுற்றிலும் படைகளை நிறுத்தினான். பாவம் அவனது மனைவிகளுக்கு அங்கு என்ன நடக்கப்போகிறது என்றுகூட தெரியாது.
60 பேரும் வந்தனரா என்பதை உறுதி செய்து கொண்டு, அவர்களை கொல்ல படையினருக்கு உத்தரவிட்டார். அதுவும் கொடூரமான முறையில். மன்னரின் ஆணைக்கு இனங்க படை வீரர்கள் அப்சல் கான் மனைவிகளை கொடூரமான முறையில் கொன்று குவித்தனர்.
இருந்தாலும் இறுதியாக அவர்கள் இறந்துவிட்டனரா என்ற அப்சல்கானின் சந்தேகத்தை பரிசோதித்து பின், அவர்களின் உடல்களை 60 கல்லறைகளில் புதைக்கப்பட்டன. அந்த கல்லறைகள் இருக்கும் இடம் சாத் கபார் என்று அழைக்கப்படுகிறது.
இது அப்சல்கான் மற்றும் அவனது அப்பாவி 60 மனைவியர்களின் கல்லறைகளை கொண்டுள்ளது. இந்த சாத் கபார் ஒரு சுற்றுலா பிரதேசமாக தற்போது விளங்குகிறது. இங்குள்ள கல்லறைகளை உலகெங்கிலுமிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.
பின்னர் போருக்கு சென்ற அப்சல் கான் படைகள் தோல்வியுற்றது. இதனால் சிவாஜியின் கையால் அப்சல்கான் ஜோதிடர் சொன்னபடியே கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.